என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாடிக்கொம்பு வாலிபர் தகராறு"
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு அருகே கிழக்கு மீனாட்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் சின்னநாட்ராயன் (வயது18). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இங்கு சாப்பிட வந்த சித்ரவேல் (23) என்பவர் குடிபோதையில் உணவு சரியில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு அங்கிருந்த டேபிள், சேர்களை உதைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணியிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சித்ரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இப்பகுதியில் தொடர்ந்து குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வியாபாரிகளை அச்சுறுத்தி வருகின்றனர். சாப்பிட்டு விட்டு தகராறு செய்வது, அனைத்து கடைகளிலும் பணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தர மறுக்கும் வியாபாரிகளிடம் தகராறு செய்து வருகின்றனர்.
இதனால் வியாபாரிகள் வேறு வழியின்றி பணம் கொடுத்து வருகின்றனர். எனவே போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இவ்வாறு சுற்றிதிரியும் குடிமகன்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்